தேர்தல் அறிக்கை : மக்கள் கருத்து கேட்கப்படும் கனிமொழி எம்.பி. தகவல்

1 Min Read

சென்னை, ஜன. 24- மக்களவை தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனி மொழி எம்.பி. நியமிக்கப்பட் டுள்ளார்.
இக்குழுவில், கட்சியின் செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் கள் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவரான அரசு கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இக்குழுவினர் நேற்று (23.1.2024) சந்தித்தனர். பின்னர், அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:
மக்களவை தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது.
முந்தைய தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு, இதில் புதிதாக இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் இக்குழுவினர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொது மக்கள், பல்வேறு தொழில் செய்வோர், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் என பல தரப் பினரையும் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறி வார்கள். பின்னர், சென்னையில் மீண்டும் கூடி, தேர்தல் அறிக்கையை முடிவு செய்வோம்.
இப்பணியை தொடங்குவதற்காக, முதலில் எந்தெந்த ஊர்களுக்கு செல்வது என்று பேசி முடிவெடுத்துள்ளோம். எந்தெந்த விஷயங்களை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பது என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங் களில் முடிவு செய்யப்படும். கருத்து கேட்பதற்கான மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை ஓரிரு நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே பிப்.5ஆம் தேதி தூத்துக்குடியில் கருத்துக்கேட்பு நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *