சாஸ்திர வேதங்களுக்கு எதிராக ராமன் கோயில் குடமுழுக்கா? சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு

viduthalai
1 Min Read

அரித்துவார், ஜன 13 உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் கட்டப் பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்பட பா.ஜ.கவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்த விழாவில் பங் கேற்க அரசியல் கட்சி தலைவர் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட் டது. இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துவிட்டன.

இதற்கிடையில், ராமன் கோயிலில் பிரதமர் மோடி சிலையை தொட்டு பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண் டுமா? என பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி, கூறியிருந்தார். மேலும் ராமன் விழாவில் பங்கேற்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, உத்தர காட் ஜோதிர் மடத்தின் சங்கராச் சார்யா அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதியும் ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
“அயோத்தியில் கோவில் கட்டுமானங்கள் முழு மையாக முடியாத நிலையில் சாஸ்திரங் களுக்கு எதிராக புனித மான இந்து வேதங்களுக்கு எதிராக ராமன் கோவில் குடமுழுக்கு நடத்தப் படுகிறது” என தெரிவித் துள்ளார். இப்படி பா.ஜ.க அரசுக்கு எதிராக சங்கராச்சாரியார்கள் ஒன்றாக குரல் எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *