அரசு அலுவலகங்களில் மதச் சார்பின்மைக்கு விரோதமாக வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதை தடுக்க வேண்டும்: காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
1 Min Read

காரைக்குடி, ஜன. 10– காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 31.12.2023 அன்று மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையில், மாவட் டக் காப்பாளர் சாமி. திராவிட மணி, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது.

நிகழ்வில் நகரத் தலைவர் ந.ஜெகதீசன், திராவிட தொழிலாளர் அணி செயலாளர் சொ.சேகர், ப.க. மாநில அமைப்பாளர், ஒ. முத்துக் குமார், மாவட்ட ப.க. தலைவர் சு. முழுமதி, ப.க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண் மணி, மாவட்ட இளைஞரணி தலை வர் புருனோ என்னாரசு, திராவிடர் கழகத்தில் புதிதாக தன்னை இணைத் துக் கொண்ட இளங்குடி இள.நதியா சிவகங்கை மாவட்ட ப.க செயலாளர் கணேசன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில், பெரியார் பெருந்தொண்டர் நெய் வேலி வெ.ஜெயராமன், குன்றக்குடி அடிகளாரின் தனிச் செயலாளர் புலவர் மரு. பரமகுரு ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலும், வீரவணக்கமும் தெரிவித்தும்,தேவகோட்டையில் (25.12.2023) நடைபெற்ற பெரியாரி யல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற உழைத்த, ஒத்துழைத்த, நன்கொடை வழங்கிய அனை வருக்கும் மாவட்ட திராவிடர் கழகம் நன்றி தெரிவித்தும்,

காரைக்குடி கழக மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத் துவமனைகளில் மத சார்பின் மைக்கு விரோதமாக வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை சமூக நீதி காக்கும் திராவிட மாடல் அரசு தடுக்க வேண்டும் எனவும், காரைக் குடி கழக மாவட்டத்தில் ஒன்றியங் கள் தோறும் கிளைக் கழகங்கள் தொடங்குவதெனவும், கழகக் கொடிகள் ஏற்றுவதெனமும் தீர் மானிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *