நீண்ட நாள் சிறைவாசிகள் 49 பேர் விடுதலை செய்வதற்கான கோப்புகள் ஆளுநரால் தடை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, அக் 18  நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் அளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது, குறித்து  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி   தலை மைச் செயலகத்தில்  செய் தியாளர்கள் சந்திப்பில் கூறி யதாவது:- புதிதாக ஆளுநருக்கு சட்டமன் றத்தில் நிறைவேற்றபட்ட சட் டங்கள் அனைத்தும் ஆளுநருக்கு அனுப்பப் பட்டுள்ளது. நீண்ட கால சிறைவாசிகளுக்கு விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பபட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் 115ஆவது ஆண்டு விழாவை முண்னிட்டும், சிறைவாசிகள் விடுதலை குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள் ளது. நீண்ட கால சிறை வாசிகள் விடுதலை தொடர்பான கோப்பு களில் ஆளுநர் கையெ ழுத்திடமாட்டர் என பாஜக தலைவர் அண்ணா மலை கூறியது குறித்த செய்தியாளர்கள் கேள் விக்கு: ஆளுநரும், அண்ணாமலையும் ஒன்று என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புகொண்டதாக அமைச்சர் கூறினார். ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கபட்டுள்ள நிலையில், கண்காணிப்பு குழு அமைத்து அரசு கண்காணித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு களை பொறுத்த வரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. என அமைச்சர் தெரிவித்தார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *