சிவகங்கை மாவட்ட ப.க. சார்பில் பள்ளிகளில் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சிவகங்கை, அக். 18- சிவகங்கை மாவட்டம் தி. புதுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் சிவ கங்கை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 

.அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் முருகப்பா நடமாடும் ஆய் வக பயிற்சியாளர் அரங் குலவன் கலந்து கொண்டு சந்திர மறைப்பு சூரியமறைப்பு பரிணாம வளர்ச்சி உள் ளிட்டவற்றை செயல் முறை விளக்கங்கள் மூலம் செய்து காட்டி விளக்கிப் பேசி அறிவியல் உண்மை களை காட்சிப்பூர்வமாக விளக்கினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கவிஞர் கணேசன் பேசு வையில் லட்சக்கணக்கான அறிவியல் ஆசிரியர்கள் இந்த சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கருத்தை ஒற்றை மனிதராக கொண்டு போய் சேர்த்த தந்தை பெரியார் அறிவி யல் ஆசிரியர்களுக்கு எல் லாம் ஆசிரியர் – .சந்திர மறைப்பு சூரிய மறைப்பு பற்றிய அறிவியல் உண் மையை சொல்லிக் கொடுத்து விட்டு கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் அமர்ந்து மூதாதையர் ஆவிக்கு தர்ப்பணம் கொடுப் பது போன்ற மூட செயல் கள் யோசிக்க வேண்டி யவை .படிக்கிற அறிவியல் உண்மைகளை -போதிக்கிற அறிவியல் சிந்தனைகளை நடைமுறை வாழ்வில் கடைப்பிடித்தால் தான் அறிவியல் படிப்பதன் நோக்கம் நிறைவேறும் என்று குறிப்பிட்டார் 

.இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மதி வாணன், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், மாண வர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் நிஜாம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *