மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா-எம்.எல்.ஏ. பிரபாகரன் பங்கேற்பு

1 Min Read

பெரம்பலூர், ஜன.7- தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளை முன் னிட்டு பகுத்தறிவாளர் கழகம் சார் பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலைப் பள்ளியில் பேச்சு போட்டி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் பிர பாகரன், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி குழும தலைவர் வரதராஜன் மற்றும் முகுந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேச்சுப் போட் டியில் வென்ற மாணவ மாணவி களுக்கு பரிசளித்து பாராட்டுக் களை தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் திரா விடர் கழகத்தினர் மாவட்ட தலை வர் தங்கராசு, ஆறுமுகம், ராமு, ராஜகெண்ணடி, இளையராஜா, விஜேந்திரன், துரைசாமி, சீதாபதி, ஆதிசிவம், கந்தசாமி, மருத்துவர் கருணாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *