ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.10.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

* தெலங்கானாவில் நடைபெற இருப்பது நிலச் சுவான்தார்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தேர்தல், ராகுல் பேச்சு.

* சந்திரசேகர ராவ் ஆட்சியில் சமூக நீதி இல்லை, பிரியங்கா சாடல்.

* திரிணாமுல் எம்.பி. மஹுவா மீது குற்றச்சாட்டு சுமத்திய  நிஷிகாந்த் துபே, ஆதாரத்தை சமர்ப்பிக்க, நாடாளுமன்ற நெறிமுறைக் குழு உத்தரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ஆந்திர அரசு நவம்பர் 15ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப் பைத் தொடங்கும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ணா அறிவிப்பு.

* முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் போன்று தங்கள் மத இடங்களை நிறுவவும், நிர்வகிக்கவும், பராமரிக்கவும் ஹிந்துக்களுக்கு உரிமை கோரும் பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு.  இந்த மனுவை “விளம்பரம் சார்ந்த வழக்கு” என்றும் கண்டனம்.

* ஓபிசியினருக்கான மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டிற்கு பா.ஜ.க.வின் உறுதியான எதிர்ப்பை யும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சமமான தீவிர ஆதரவையும் அரசியல் வர்க்கத்தின் நெறிமுறை நெருக்கடி என்கிறார் கட்டுரையாளர் நிவேதிதா மேனன்.

தி இந்து

* நிலக்கரி இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமம் மீது விசாரணை: ராகுல் காந்தி பரபரப்பு அறிவிப்பு.

தி டெலிகிராப்

* நடந்து வரும் தசரா விழாவில் முஸ்லிம் விற்பனையாளர்களை அனுமதிக்கும் கருநாடக கோவிலின் முடிவை எதிர்க்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து சார்பு வணிகர்கள் அமைப்பு, ஹிந்துக்களுக்கு சொந்தமான கடைகளில் காவிக் கொடிகளை ஏற்றி, தங்கள் கடைகளில் மட்டுமே மக்கள் வணிகம் செய்ய வலியுறுத்துகின்றன.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *