கோவை பெரியார் பெருந்தொண்டர் கண்ணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

viduthalai
1 Min Read

கோவை பெரியார் பெருந் தொண்டர் மானமிகு இ.கண்ணன் அவர்கள் (வயது 84) நேற்று (2.1.2024) இரவு 8.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
15ஆம் வயது முதல் கழ கத்தில் தொடர்பு கொண் டவர்.

கோவை மாவட்ட கழக செயலாளராகவும், கோவை மாவட்ட பகுத்தறிவு இலக்கிய அணியின் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியவர்.
கோவை ரேஸ் கோர்ஸ் நடைபாதை பகுதியில் ஆண்டு தோறும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா , அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவினை தொடர்ச்சியாக முன்னெடுத்து 50க்கும் மேற்பட்ட பகுத்தறிவுக் கூட்டங்களை நடத்தி உள்ளார்.

பகுத்தறிவு கொள்கை பரவ வேண்டும் என்ப தற்காக திராவிடர் கழக புத்தகங்களை வழங்குவது அவரின் முக்கிய பணி!
கோவை செல்வபுரம் பகுதியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிடர் கழக வட்டார மாநாட்டு மேடையில் தமது மறைவுக்குப் பிறகு தமது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு வழங்க விண்ணப்பம் அளித்தது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடு மிக்க பெரியார் பெருந்தொண்டரின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும்.

அவர் பிரிவால் துயருறும் வாழ்விணையர் விஜயா கண்ணன், க. செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
3.1.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *