திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்க!

viduthalai
2 Min Read

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 30– திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசின் வேலை வாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்க ளுக்கான காலிப்பணியிடங் களை நிரப்பும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு விண்ணப்பங் களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளி யிட்டது. இப்பணிக்கு விண்ணப் பித்த கோபி கிருஷ்ணா என்பவர் 10ஆம் வகுப்புக்குப் பிறகு நேரடி யாக திறந்த நிலை பல்கலைக் கழகம் மூலமாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்று, அதன் பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு தனித்தேர்வு எழுதி 12ஆம் வகுப் பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி அவரது விண்ணப்பம் நிரா கரிக்கப்பட்டது. இதை எதிர்த்து கோபி கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித் துள்ள உத்தரவில், ‘‘கடந்த 2009 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி 10 + 2 + 3 என்ற அடிப்படையில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, அதன்பிறகு இளநிலைப் பட்டம் என்ற வரிசையில் கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசா ணையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் மனுதாரர் 10ஆம் வகுப்புக்குப் பிறகு நேரடியாக முனைவர் பட்டமே பெற்றுவிட்டார். அதன் பிறகு 12ஆம் வகுப்பை படித்து அதிலும் தேர்ச்சி பெற்று உள்ளார். இந்த தலைகீழ் நடை முறையை யாரும் அங்கீகரிக்க வில்லை. அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியின்படி உரிய தகு தியை மனுதாரர் பெறவில்லை என்பதால் அவர் மீது இரக்கம் மட்டுமே காட்ட முடியும். அரசு வேலைவாய்ப்பை வழங்க வேண் டுமென நிவாரணம் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

அதேநேரம், வழக்கமான நடைமுறைப்படி கல்வியைப் பெற முடியாதவர்களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக்கழகங் களை உருவாக்கி நாடாளுமன் றத்திலும், சட்டப்பேரவையிலும் ஒன்றிய, மாநில அரசுகள் சட் டங்களை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலை வாய்ப்புக்கு ஏற்க மறுப்பதால் பல விண்ணப்பதாரர்கள் பாதிக் கப்பட்டு வழக்கு தொடரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே சமூக நலன் கருதி திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை ஏற்க மறுப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை தற்போது அமலில் உள்ள சட்டங்கள் மட் டுமே கருத்தில் கொள்ளப்படும், எனவும் நீதிபதிகள் தெளிவு படுத்தி உள்ளனர். வழக்கமான நடைமுறைப்படி கல்வியை பெற முடியாதவர்களுக்காகவே திறந்த நிலைப் பல்கலைக் கழ கங்கள் உருவாக்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *