கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.10.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்படும், ராகுல் உறுதி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் சரத்பவார் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அமலாக்கத்துறை தங்கள் விருப்பத்தின் பேரில் கைது செய்ய அதிகாரம் இல்லை என டில்லி உயர்நீதிமன்றம் கண்டிப்பு.
* பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.எம்.இப்ராஹிம் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கருநாடக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கம். புதிய மாநில தலைவராக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி நியமனம்.
எகனாமிக் டைம்ஸ்:
* ஆயுத பூஜை என்ற பெயரில் தலைமை செயலக கட்டடத்தில் சாந்து, மஞ்சள் இவற்றைப் பூச தடை, – கருநாடக அரசு சுற்றறிக்கை.
தி டெலிகிராப்:
* இஸ்ரேல் தன்னை ‘யூதர்களின் தாயகம்’ என்று அடையாளப்படுத்துவதைப் போல இந்தியாவை ‘ஹிந்து தாயகம்’ ஆக்க ஹிந்துத்துவ சித்தாந்தவாதிகள் விரும்பு கிறார்கள் என்கிறார் யேல் பல்கலைக்கழக பேராசிரியர் சுசாந்த் சிங்.
– குடந்தை கருணா