புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு- பா.ஜ.க. அரசுகளால் சிறுபான்மையினருக்கு தொடரும் அச்சுறுத்தல்கள்
போபால்,டிச.17- அண்மையில் நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோகன் யாதவ் முதலமைச்ச ராகவும், ஜெகதீஷ் தேவ்தா, ராஜேந்திர சுக்லா ஆகிய இரண்டு பேர் துணை முதலமைச்சராகவும், சட்டமன்றத் தலைவராக மேனாள் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் டிசம்பர் 13-ஆம் தேதி பொறுப்பேற்றனர்.
மத்தியப்பிரதேசத்தின் புதிய முதலமைச்சரான மோகன் யாதவ் மாநிலம் முழுவதும் பொது இடங் களில் மத வழிபாட்டு ஒலி பெருக்கிகளுக்கு தடையும், உரிமம் இல்லாமல் இறைச்சியை திறந்தவெளியில் விற்க தடை விதிக்கும் செயல் திட்டங்களை யும் முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திட்டம் விரை வில் அமலுக்கு வரும் என மத்தியப் பிரதேச அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
முதலமைச்சர் மோகன் யாத வின் ஒலி பெருக்கி மற்றும் இறைச்சிக்குத் தடை தொடர் பான செயல்திட்டம் முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு எதிரான நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.
ஒலி மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல் மூலம் மத வழிபாட்டு ஒலிபெருக்கிகளுக்கு தடை திட்டம் கொண்டு வருகி றோம் என மத்தியப்பிரதேச பா.ஜ.க. அரசு கூறினாலும், மசூ திகளில் நாள்தோறும் ஒலிக்கும் தொழுகை பாடல்களை தடை செய்வதற்கான செயல் திட்டம் தான் மத வழிபாட்டு ஒலி பெருக்கிகளுக்கான தடையின் முன்மொழிவு என அம்மாநில எதிர்கட்சித் தலைவர்கள் எச் சரிக்கை தெரிவித்துள்ளனர்.
இதே போல உரிமம் இல் லாமல் இறைச்சியை திறந்த வெளியில் விற்க தடை விதிக்கும் திட்ட முன்மொழிவு மூலம் மாட்டிறைச்சி தடை மற்றும் நாளடைவில் இறைச்சி இல்லாத மத்தியப்பிரதேச மாநிலம் என்ற பெயரை கொண்டுவருவதற்கான வகுப்புவாத அரசியலை கையி லெடுத்துள்ளது மத்தியப் பிர தேச பாஜக அரசு.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜுக்கி ஜோப்ரி பகுதியின் பா.ஜ.க. தலைவர் தேவேந்திர சிங் தாக்கூர் அடையாளம் தெரி யாத நபர்கள் வெட்டியதில் காயமடைந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் இந்த விவகாரத்தில் முஸ்லீம்கள் மீது சந்தேகம் இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. அடுத்த சில நாட் களில் சந்தேகத்தின் பேரில் அஸ்லாம், ஷாருக், பிலால், சமீர் ஆகிய 4 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத் துச் சென்றனர்.
இந்நிலையில், எவ்வித ஆதா ரமும் இல்லாமல் கைது செய்யப் பட்ட 4 பேர்தான் பா.ஜ.க. தலை வர்மீது தாக்குதல் நடத்திய வர்கள் என அறிவித்து அவர் களை சிறையில் அடைத்தனர் ஹபீப்கஞ்ச் காவல்துறையினர்.
இந்நிலையில் கைது செய்யப் பட்ட 4 பேரில் 3 முஸ்லீம்களின் வீடுகள் சட்டவிரோதமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அவர்களின் வீட்டை நேற்று (15.12.2023) ஹபீக் கஞ்ச் வட்டார அதிகாரிகள் புல்டோ சர் மூலம் இடித்து தரைமட்ட மாக்கினர்.
தேசியப் பாதுக்காப்புச் சட் டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் 3 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என ஹபீப் கஞ்ச் காவல்துறை ஆய்வாளர் மணீஷ் ராஜ் சிங் படோரியா விளக்கம் அளித் துள்ளார்.
மோகன் யாதவ் மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவி யேற்று இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேச பாஜக அரசு போல புல்டோசர் மூலம் முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் களமிறங்கி யுள்ளார்.