வெள்ள நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்தது ஒன்றிய அரசு குழு பாராட்டு

viduthalai
1 Min Read

சென்னை,டிச.15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்த தற்காக தமிழ்நாடு அரசை ஒன்றிய குழு பாராட்டியுள்ளது.
புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த ஒன்றியக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (14.12.2023) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியக் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி பேசுகையில், “மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ. 6 ஆயிரம் நிவாரணம் அறிவித்ததற்கு பாராட்டுகள். வானிலை மய்யத்தின் முன்னெச் சரிக்கையை அடுத்து தமிழ்நாடு அரசு தகுந்த அறிவியல் பூர்வ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்து விடப்பட்டதால் வெள்ளச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.
தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டனர். எங்கள் குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களைப் பார்வை யிட்டு உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவரங் களைத் திரட்டியுள்ளது. அதன் அடிப்படையில் குழு தயா ரிக்கும் ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்து நிவாரண உதவிகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *