நூறுநாள் வேலைத்திட்ட நிதியை அதிகப்படுத்துங்கள்! கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

1 Min Read

புதுடில்லி, டிச.7- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது, 100 நாள் வேலைத் திட்டம் மூலம் இந்தி யாவில் உள்ள கிராமப்புற பெண் கள் அதிக பயன்பெற்று வருகின்றனர்.

2005ஆ-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப் பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு அதி கரித்துள்ளது. கிராமப்புற பொரு ளாதாரம் உயர்ந்தது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

அனைத்து தொழிலாளர் களுக்கும் இந்த திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு 60 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவு ஆகும்.

நிதி குறைப்பால் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாகி உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *