புத்தக விழாவில் நூல் வெளியீடு

Viduthalai
1 Min Read

இந்தியா

கருநாடக மாநில தமிழ் பத்திரிகை சங்கம் நடத்தும் புத்தக விழாவில் “பெரியாரும் அறிவியலும்” என்ற புத்தகத்தை இந்தியாவின் நிலவு மனிதர் விண்வெளி விஞ்ஞானி  முனைவர்  மயில்சாமி அண்ணாதுரை வெளியிட. பேராசிரியர் கு.வணங்காமுடி நூறு பிரதிகள், கருநாடக மாநில தமிழ் சங்க இணை செயலாளர் அமுதபாண்டியன் 50 பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். கருநாடக மாநில தமிழ் பத்திரிகை சங்கத் தலைவர் முத்துமணி நன்னன், பொருலாளர் தினகரவேலு, ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், பொறியாளர் லூயீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் “பெரியாரும் அறிவியலும்” நூலை அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *