ஆசிரியர் 91

Viduthalai
0 Min Read
திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

பார்ப்பதற்கு இளையர்

பழகுவதற்கு எளியவர்

உண்மையை உரைப்பவர்

ஊருக்கு உழைப்பவர்

உலகெலாம் சென்று தன்

தலைவரை வளர்ப்பவர்

தரணியில் தந்தை சொல்

நிலைக்க பாடுபடுபவர்

தனக்கென்று தனி புத்தி

இல்லையென்று உரைப்பவர்

பம்பரம்கூட சிறிது

நேரம்தான் சுற்றும்

சுற்றும் உலகம் கூட

பூகம்பத்தால் நிற்கும்

கடலலைகூட காற்றுக்

கேற்ப தாழும்

காற்றுகூட புயலடித்து

சில நேரம் ஓயும்

நம் ஆசிரியர் மட்டும் என்றும்

சுற்றுவதை நிறுத்துவதில்லை

ஓய்வதில்லை, தாழ்வதில்லை

நம்மனைவர் மனங்கவர்

பெரியாரின் தனயன்

என்றும் என்றும் வாழ்கவே!

வேல்.சோ. நெடுமாறன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *