இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் எச்சரிக்கையும் பிரதமரின் திரிபும்

1 Min Read

புதுடில்லி, ஜன.13 இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த நிதி யாண்டில் குறையும் என தெரிவித்துள்ளது, உலக வங்கி.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.6 சதவீதமாக வேகம் குறையும்.

இருப்பினும், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட ஏழு வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள் ளது என்பது குறிப்பிடத் தக்கது.நடப்பு நிதியாண்டில், இந்தியா 6.9 சதவீத வளர்ச் சியை காணும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டில் வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. 2024_2025 நிதியாண்டில் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

உலக பொருளாதாரத்தில் இந்தியா பிரகாசமாக இருக்கிறதாம்

பிரதமர் மோடி திரிபுவாதம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பன்னாட்டு முத லீட்டாளர்களின் 7-வது   மாநாட்டை பிரதமர் நரேந் திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப் போது பிரதமர் மோடி பேசிய தாவது: 

இந்தியா 2014 முதல் சீர்திருத்தம், வெளிப்பாடு சிறப்பான செயல்பாட்டின் பாதையில் உள்ளது. இதன் விளைவாக இந்தியா முதலீட் டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் பன் னாட்டு நாணய நிதியம் இந்தியாவை வெளிச்சமான இடத்தில் வைத்துள்ளது. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதில் இந்தியா நல்ல நிலையில் உள் ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் வலிமை யான மேக்ரோ பொருளாதார அடிப்படை களே இதற்கு காரணம். கடந்த 8 ஆண்டு களில் முதலீட் டிற்கான வழிமுறைகளை துரிதப் படுத்தி, பல்வேறு தடைகளை இந்த அரசு நீக்கியுள்ளது. மிகவும் முக்கியமான பாது காப்பு, சுரங்கம், விண் வெளி துறைகளில் தனியாருக்கு வாய்ப்புகளை வழங்கியுள் ளோம் என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *