ஆங்கிலத்தில் ஆரிய மாயை!

1 Min Read

அரசியல்

தமிழ்நாட்டின் சிந்தனை வளர்ச் சியைச் செதுக்கியவை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் கருத் துகள்தான் என்றால் மிகையில்லை. அர சியல் வீரியம்மிக்க அந்த எழுத்துகளைப் பிறமொழிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. குறிப்பாக, ஆரியம் – திராவிடம் கருத்து மோதல்கள் உச்சம் பெற்றுள்ள இந்த நாட்களில், பேரறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது DRAVIDIAN STOCK பதிப்பகம்.

“பேரறிஞர் அண்ணாவின் சொல்வளம் மிக்க மொழிநடையை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பது மிகச் சவாலானது” என்கிறார் இதனை மொழியாக்கம் செய்துள்ள நெய்வேலி அசோக். அண்ணாவையும் பெரியாரையும் இந்தியா முழுக்க வாசித்தால், கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என்பது என் நம்பிக்கை. தமிழர் அல்லாதோரிடம் பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளோம். ஆங்கில முறை கல்வி பயிலும் நம் பிள்ளைகளுக்கும் இது பயன்படும். எனது நான்கு ஆண்டு ஆசை நிறை வேறியுள்ளது” என்கிறார் பதிப்பாளர் கவுதம். 

நூல் விலை – ரூ.130

நூல் தேவைக்கு 90927-87854 என்கிற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: ”முரசொலி’ 30.10.2023 பக்.12

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *