இந்திய-பிரஞ்சு நிலைத்தன்மை மாநாடு

1 Min Read

சென்னை, ஜன. 29- இந்தோ-பிரெஞ்சு வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (மிதிசிசிமி) தனது முதல் நிலைத் தன்மை மாநாட்டை சென்னையில், பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சுப்ரியா சாகு  ஆகியோர் முன் னிலையில் தொடங் கியது.

இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட உயர்மட்ட பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த வணிகத் தலை வர்கள் கலந்துகொண்ட நிலைத்தன்மை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தலைமை அனுபவ அதிகாரி கள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற் றனர். இந்தோ-பிரெஞ்சு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் 20 நம்பிக்கைக்குரிய நிலையான ஸ்டார்ட்-அப்களுக்கு இடையே ஒரு ஸ்டார்ட்-அப் போட்டியை நடத்தியது, அதில் டெல்லஸ் ஹாபிடேட்  நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரஞ்சு தூதர் லிஸ் டால்போட் பாரே கூறுகையில்:- “சுற்றுச்சூழல் மாற்றம் ஒரு சவாலாக மட்டும் பார்க்கப்படாமல், தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும், புதிய புதுமையான சந்தைப் பிரிவுகளை வெல்வதற்கான மகத்தான வாய்ப்பாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பிரெஞ்சு நிறுவனங்களுக்கு அதற்கான விருப்பமும் ஆர்வமும் உள்ளது. அவர்கள் இந்தியாவின் இந்த புதுமையான சூழலியல் மாற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்று கூறினார்.   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *