பன்னாட்டு நிதி கண்காணிப்பு அமைப்பின் முக்கியப் பதவிக்கு இந்திய அதிகாரி தேர்வு

பாரிஸ், ஜூன் 23-  பயங்கர வாத நிதி தடுப்புக்கான பன் னாட்டு அமைப்பின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மூத்த அய்.ஏ.எஸ்., அதிகாரி விவேக் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வளர்ந்த நாடுகளின் கூட்டமைப் பான, ‘ஜி - 7’ முன்முயற்சி காரண மாக, 1989 ஜூலையில் அய்ரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் எப்.ஏ.டி.எப்., எனும் பன்னாட்டு நிதி நடவடிக்கை பணிக் குழு தொடங்கப்பட்டது.

உலகளவில் அதிகரித்து வந்த கள்ளப் பணத்தை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க மட்டுமே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

கடந்த, 2001 செப்., 11இல் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் வகையில், இந்த அமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது, பண மோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி தடுப்புக்கான பன்னாட்டு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் பொதுக் குழு கூட்டம் பாரிசில் சமீபத்தில் நடந்தது.

இதில், ஒன்றிய கலாசாரத் துறைச் செயலராக பணியாற்றி வரும் விவேக் அகர்வால், இந்த அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்தாண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலத்திற்கு அகர்வால் இப்பதவியை வகிக்க உள்ளார்.

கடந்த 1994ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பிரிவு அய்.ஏ.எஸ்., கேடரைச் சேர்ந்தவர் விவேக் அகர்வால். எப்.ஏ.டி.எப்.,க்கான இந்திய குழுவிற்கு ஏற்கெனவே தலைமை தாங்கியுள்ளதுடன், எப்.அய்.யு., எனும் இந்திய நிதி புலனாய்வு பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.

அகர்வால் நியமனத்திற்கு ஒன்றிய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த, 2010இல் இந்த அமைப்பில் இணைந்த பின், முதல்முறையாக சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பன்னாட்டு அமைப்பில், இந்தியா துணை தலை வர் பதவியை வகிக்க உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *