கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதிக்கு மும்பையில் விருது

Viduthalai
1 Min Read

இந்தியா

மும்பையில் நடைபெற்ற ராஷ்டிய சமாஜ் தொழிலாளர் அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வங்கித்துறை ஊழியர்களின் நலனுக்காக பல்வேறுவகையில் செயல்பட்ட யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் மற்றும் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வங்கி ஊழியர் அமைப்பின் செயலாளருமான கோ.கருணநிதி அவர் களுக்கு ராஷ்டிரிய சமாஜ் யஷ்வந்த் கவுரவ் விருது 2023 வழங்கி சிறப்பித்தனர். 

விருது வழங்கும் விழாவில் ஆந்திர மாநில மேனாள் தலைமை நீதிபதி மற்றும் சித்தராமானந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருதினை வழங்கினர். 

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய 

கோ.கருணாநிதி சமுகநீதிக் களத்தில் தந்தை பெரியாரின் பங்கும் அதன் பலன் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிப்பது குறித்து உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *