மீண்டும் ஒரு ரோகித் வேமுலா? அய்.அய்.டி. விடுதியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தற்கொலை

Viduthalai
2 Min Read

மும்பை, பிப் 14 மும்பை அய்.அய்.டி. விடுதியில் சக மாணவர்களின் ஜாதி வெறி பேச்சு காரணமாக 7ஆவது மாடி யில் இருந்து குதித்து முதலாமாண்டு பி.டெக் மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப் பையும், சர்ச்சைக்கும் வித்திட்டிருக் கிறது. 

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சொலான்கி (18). பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை அய்.அய்.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். தற்போது முதலா மாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமையன்று  (பிப்.,12) அய்.அய்.டி விடுதியின் 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார் சொலான்கி. கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு முடிந்திருக்கும் நிலையில் தர்ஷன் சொலான்கியின் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது.மாடியில் இருந்து தர்ஷன் குதித்ததை அடுத்து விடுதி பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் பவாய் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டிருக்கி றார்கள். தர்ஷனின் விடுதி அறையை ஆராய்ந்ததில் தற்கொலை கடிதங்கள் எதுவும் இல்லை எனக் கூறிய காவல் துறை இந்த தற்கொலையை எதிர் பாராத மரணம் என வழக்குப் பதிந் திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதனிடையே, அய்.அய்.டி. பாம்பேவின் அம்பேத்கர், பெரியார், புலே ஷாகு படிப்பு மய்யம் என்ற மாணவர் இயக்க சொலான்கியின் தற்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.அதில், “பி.டெக் படிப்புக்காக வெறும் 3 மாதங் களுக்கு முன்பே அய்.அய்.டி. பாம்பே வில் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மாணவனான தர்ஷன் சொலான்கியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். 

தர்ஷனின் மரணம் ஏதோ தனிப் பட்ட இறப்பாக எங்கள் கருத முடியவில்லை. மாறாக இது மும்பை அய்.அய்.டியின் நிறுவன கொலையாக நினைக்கிறோம்” என பதிவிடப்பட்டி ருக்கிறது. மேலும், “தர்ஷனின் மரணம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கொலை என புகார் தெரிவித்தும் மும்பை அய்.அய்.டி. நிர்வாகம் எந்த விசா ரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கவில்லை. இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சுகளால் முதலாமாண்டு மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத் தப்பட்டு வருகிறார்கள்.” என்றும் சாடியிருக்கிறார்கள். மும்பை அய் அய் டி-யில் பட்டியல் இன மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஜாதி ரீதியிலான அழுத்தத்தை உயர்ஜாதி ஆசிரியர்களும் மாணவர்களும் கொடுத்து வந்தனர். தற்கொலை செய்துகொண்ட சோலான்கி அம்பேத்கர் பெரியார் புலே சாகு படிப்பு வட்டத்தில் உள்ள சக மாணவர்களிடம் பேசும் போது தனக்கு ஜாதி ரீதியிலாக பெரும் அழுத்தம் வருகிறது.  என்று அடிக்கடி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *