சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்மேரிஸ் சாலை, புனித மேரி கல்லறை வாசலில் சட்டவிரோதமாக நடைபாதையில் கிறிஸ்தவ கோயில் கட்டப்பட்டு வந்தது, மந்தைவெளி பகுதி கழக பொறுப்பாளர் இரா.மாரிமுத்து மூலம் மந்தைவெளி சென்னை 28, மண்டலம் 9, மாநகராட்சி துறைக்கு தொலைபேசி வாயிலாக 3.2.2023 அன்று புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 11.2.2023 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மாதா கோயிலை இடித்து அகற்றினர்.