மகாசிவராத்திரியின் ‘மகிமையோ மகிமை!’

Viduthalai
1 Min Read

லக்னோ, பிப். 20- ‘புனித’ நீராடச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆற்றில் ‘புனித’ நீராட சென்ற 5 மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18.2.2023 அன்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் படவுனில் உள்ள கங்கை ஆற்றில் ‘புனித’ நீராட சென்றனர். இந்த நிலையில் ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காணாமல் போன அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் அவர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்னும் 3 பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காணாமல் போன மாணவர்களின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *