கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.9.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ரூ.2,000க்கு மேற்பட்ட யு.பி.அய். பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “பிரதமர் மோடி, டிரம்ப் முன் மண்டியிட முடிவு செய்துவிட்டார்”: யு.பி.அய். கட்டணங்கள் தொடர்பான புதிய வணிகர் கட்டண விதிமுறைகளை தொடர்ந்து, ராகுல் காந்தி ஒன்றிய அரசை விமர்சித்து ‘யு.பி.அய். வரி’ எனக் கிண்டல்.

தி இந்து:

* “தற்போதைய மோடி அரசின் கீழ் கல்விச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது”: மோடி தலைமையிலான ஆட்சியில் கல்விச் சுதந்திரம் வெகுவாக குறைந்துள்ளதாக ‘FREE TO THINK 2026’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

* “சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமதிப்பதாகும்; ஜனநாயக கேலிக்கூத்து”: இத்தகைய நடைமுறையைத் தடுக்க, அரசியலமைப்புச் சட்டம் 324இன் கீழ் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தி டெலிகிராப்:

* “உமர் காலித் வழக்கை நடத்த மோடி, அமித்ஷாவுக்கு பிரியங்க் கார்கே சவால்”: சிறையில் உள்ள மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித்தை தேச விரோதி என நீதிமன்றம் சொன்னதா? கருநாடக உள்துறை அமைச்சர் பிரியங் கார்கே கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அரசால் அனைத்திற்கும் மானியம் வழங்க முடியாது”: சாணக்கியரின் தேனீ–தேன் உவமையைச் சுட்டிக்காட்டி, மக்களிடமிருந்து வரி மென்மையாகவும் படிப்படியாகவும் வசூலிக்கப்பட வேண்டும் என யு.பி.அய். கட்டணங்கள் குறித்து நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *