டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அடுத்தகட்டப் போராட்டம்? கரப்பான் பூச்சி கட்சி ஆக.5ஆம் தேதி ஆலோசனை: மகாராட்டிராவில் நடக்கிறது
* காணிக்கைத் திருடர்கள் அனைவரும் பாஜகவில் உள்ளனர்: ராமன் கோயில் விவகாரத்தில் காங். கடும் தாக்கு. முன்னாள் உபி அமைச்சரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான பிரமோத் திவாரி கூறியதாவது: ராமன் கோயில் நன்கொடைகளில் இருந்து மட்டும் திருட்டு நடக்கவில்லை. கடந்த 1980களின் இறுதியில் ராமன் கோயிலுக்கான செங்கல்கள் கொண்டு செல்லும் பூஜைகளின் போதே இது போல் நடந்துள்ளன.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே, மிரட்டிப் பணம் பறிப்பு புகார்கள் அதிகரித்துள்ளன. முன்னாள் திரிணாமுல் நிர்வாகிகள் கொண்டு வந்த ‘வசூல் கலாச்சாரம்’ இன்னும் நீடிப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ரூ.1,800 கோடி இழப்பு வழக்கு: ஈபிஎப்ஓ நிதி மோசடி தொடர்பாக அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் மீது சிபிஅய் வழக்குப்பதிவு. முறைகேடான கடன், நிதி திசைதிருப்பல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை தீவிரம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்ற நிலுவையில் 158 சிபிஅய் வழக்குகள்: 20 ஆண்டாகியும் விசாரிக்கவில்லை.
* பாஜக ஆட்சிக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் 26,000-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டதாக அகிலேஷ் குற்றச்சாட்டு. இதனால் ஓபிசி, எஸ்சி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தி இந்து:
* பெயர் நீக்கம்: ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் நீக்கியுள்ளது. மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு வாசல் ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் என இனி குறிப்பிடப்படுகிறது.
தி டெலிகிராப்:
* அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நிலம் வாங்கிய கட்டத்திலிருந்தே நிதி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கோயில் கொள்ளை: மும்பை சித்திவிநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் ரூ.18 கோடி நன்கொடை முறைகேடு நடைபெறுவதாக ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.அயோத்தி ராமர் கோயிலிலும் ரூ.1,400 கோடி நிதி மோசடி நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா
