பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி! அண்ணா வெறும் படம் அல்ல; என்றும் நமக்குப் பாடம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) ‘‘அண்ணா வெறும் படம் அல்ல; என்றும், நமக்குப் பாடம்’’ என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2026) பகுத்தறிவுப் பகலவன் திராவிடர்தம் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக்கரான பேரறிஞர் அண்ணா அவர்களது 118 ஆவது பிறந்த நாள் பெருவிழா!

தமிழ் மான, தன்மானப் பெருவிழா!

தனது கல்விப் பருவத்தை சென்னையில் முடித்தவு டன், தந்தை பெரியார் என்ற சுயமரியாதை ஈர்ப்பு மய்யத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் தளபதியாக, தந்தை பெரியாரால் பெருமைப்படுத்தப்பட்டார்!

திராவிடத்தின் மீட்சிக் காலமாக்கி
வரலாறு படைத்த ‘அரசியல் அதிசயம்!’

அண்ணா ஒரு பல்கலைக் கொள்கலன்! எழுத்து, பேச்சு, சிந்தனை, செம்மையான ஆளுமை, நாடாளு மன்றவாதி, ஓராண்டு முதலமைச்சர் பதவிக் காலம் என்ற குறுகிய தனது ஆட்சிக்காலத்தை, திராவிடத்தின் மீட்சிக் காலமாக்கி வரலாறு படைத்த ‘அரசியல் அதிசயம் ஆவார்!

பொதுவாழ்வில் அவர் தனது அறிவு ஆசானிடமிருந்து – ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராகி கற்றுக்கொண்ட பல பண்புகள் அவரை நாளும் உயர்த்தி, வரலாற்றில் எவரும் பெற முடியாத தனித்த ஓர் இடத்தில் அமர்த்தி யுள்ளது!

‘என்றும் எனது தலைவர் இடம் காலியே; அதை மீண்டும் அவரை அழைத்து வந்தே நிரப்புவேன்!’

எதிர்நீச்சல், துணிவு, எதிரிகளிடத்தில்கூட கனிவு, ஆட்சி கிடைத்தபோது பணிவு, ஆளுமையில் அவர் எந்த ஏற்றம் பெற்றாலும், அந்த ஆட்சியை தனது ஆசானுக்குக் காணிக்கை ஆக்கிய பண்பின் உச்சம். ‘என்றும் எனது தலைவர் இடம் காலியே; அதை மீண்டும் அவரை அழைத்து வந்தே நிரப்புவேன்’ என்ற வீர சபதத்தினை அரசியலில் நிறைவேற்றிக் காட்டிய விந்தை மனிதர் பேரறிஞர் அண்ணா என்ற பெரும் ஆளுமை!

‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியாரே!’ என்று கூறியது மட்டுமல்ல, அதைச் சொல்லாலும், செயலாலும் அரசு மூலம் நிரூபித்துக் காட்டிய மாவீரர் நம் அண்ணா அவர்கள்.

முதலமைச்சர் பதவி, அவரது வாழ்வின் வசந்தமல்ல; தந்தை பெரியாருடன் இருந்து பரப்புரை செய்ததே ’தம் வாழ்வின் வசந்தம்’ என்று மனந்திறந்த மாமனிதர் அவர்.

தன்மான ஆடை வழங்கிய
தகைசால் வள்ளல் அண்ணா!

தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி செல்லுபடியாக்கியதன்மூலம், அத்திருமணம் மூலம் பிறந்த தலைமுறைகளுக்குச் சட்டப்படி தன்மான ஆடை வழங்கிய தகைசால் வள்ளல் அண்ணா!

அண்ணா வெறும் படம் அல்ல; என்றும்
நமக்குப் பாடம்!

அறிஞர் அண்ணாவின் திராவிடர் ஆட்சிதான் மக்களின் சுயமரியாதை தொடங்கி, மாநிலங்களின் சுயமரியாதை வரை விளக்கி, அதற்காகப் போராட, அரசியல் களம் அமைத்தவர் நம் அண்ணா!

அண்ணா ஆட்சிதான், கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியாக அவ்வப்போது வளர்ந்து – வழிகாட்டியது!

காலத்தை வென்றிட்ட காவியத் தலைவர்!

எனவே, அண்ணா ஒரு காலத்தை வென்றிட்ட காவியத் தலைவர்.

என்றும் மக்கள் நெஞ்சில் இருக்கும் செந்தமிழ்ப் பெட்டகம்; அறிவுச் செம்மல்!

வாழ்க! வாழ்கவே!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

15.9.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *