தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, அன்றைய மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் “பெரியார் நினைவுச் சுடர்” தூண் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணை மறைத்து, கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சியான த.வெ.க.வின் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறைக்கும், உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கும் முறையான பதில் இல்லை.
நாளை மறுநாள் (செப்டம்பர் 17) பிறந்த நாள் நிகழ்வுகள் இருக்கும் நிலையில், இன்னும் அந்தப் பதாகைகளை அகற்றாமல் இருப்பதா?
