மண்ணச்சநல்லூர், செப். 11- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் மற்றும் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (10.9.2026) காலை எதுமலை சாலையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை தாங்க மாவட்ட செயலாளர் ஆ.அங்க முத்து முன்னிலை வகித்தார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாளை ஒன்றியம் முழுவதும் தோழர்களின் இல்லங்களில் பெரியார் மன்றத்தில் கழகக் கொடி யேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண் டாடுவதுடன் இறுதியில் மதியம் சிறுகனூரில் அமைந் துள்ள பெரியார் உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பெருமளவில் தோழர்கள் கலந்து கொள்வதுடன், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பெருவளப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் கூட்டத்திலும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
