சென்னை, செ.1- ஒப்பந்ததாரர்களின் விதிமீறலால் 245 சாலைகள் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று அறப்போர் இயக்கம் தகவல் தெரிவித் துள்ளது.
அறப்போர் இயக் கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று முன்தினம் (30.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அறப்போர் இயக்கம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று பொதுமக்கள் மற்றும் அறப்போர் இயக்க தொண்டர்கள் சாலை உயரம் அதிகரித்த இடங் களை படம் எடுத்து பதிவிட ஒரு ‘கூகுள் பார்ம்’ இணையதள லிங்கை கொடுத்திருந்தோம்.
தமிழ்நாடு முழுவதும் சாலை உயரம் அதிகரிப்ப தால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறிந்து அதன் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு கடந்த 6 வார காலமாக அனுப்பி வருகின்றனர்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் இருந்து 157 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள சாலை உயரம் அதிகரித்த பகுதிகளை கண்டறிந்து ஒளிப்படம் எடுத்து இந்தச் செயலி இணைப்பில் (லிங்கில்) பதிவு செய்து இருந்தனர். ஒட்டுமொத்தமாக 245 சாலை உயரம் அதிகரிக்கப் பட்டுளது.
புதிய சாலை போடும் போது பழைய சாலையை சுரண்டி எடுக்க வேண்டும் என்ற விதியை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மீறுவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனால், ஒவ்வொரு முறையும் புதியதாக தார் சாலை அமைக்கும் பொது சாலையின் உயரம் கூடிக்கொண்டே போய், வீடுகள் சாலை உயரத்தை விடப் பள்ளமாகி விடுகின்றன.
மக்களின் இன்னல், பொருளாதார இழப்பு மற்றும் பருவ மழை காலங்களில் ஏற்படும் வேதனையை அரசு உணர்ந்து உடனடியாக செயல்படுவது மிக அவசியமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
