கோவை மேற்குப் பகுதி கழகக் கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

கோவை, மார்ச் 7- கோவை மேற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 5.3.2023 அன்று காலை 11.00 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட துணைத் தலைவர் ஆட்டோ சக்தி, மாநகர தலைவர் வே.தமிழ் முரசு, பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபா கரன், மாவட்ட செயலாளர் 

க.வீரமணி, மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாவட்ட துணை செயலாளர் தி.க.காளிமுத்து, மாநகர செயலாளர் ச.திராவிட மணி, வடக்குப் பகுதி செயலாளர் கவிஞர் கவி. கிருஷ்ணன், பகுத்தறி வாளர் கழகம் ஆடிட்டர் ஆனந்த ராஜ், பகுத்தறிவாளர் கழகம் வி.என்.சி.ராஜசேகர், படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா  ஆகியோர் பங்கேற்று கருத்துக் களை பகிர்ந்து கொண்டனர்.

தீர்மானம் 1 :

கு.வெ.கி ஆசான் அவர்களின் துணைவியார் பேராசிரியர் சாரதாமணி அம்மையார் அவர்களின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 2:

கோவை மேற்குப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்கள் நடத் துவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3 :

ஆகஸ்ட் 5ஆம் தேதி திராவிட மாணவர் கழக 80 ஆம் ஆண்டு விழா மாநில மாநாட்டினை கோவைக்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *