பெண்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்பெயினில் புது அறிவிப்பு…

Viduthalai
1 Min Read

மேட்ரிட், மார்ச் 8-ஸ்பெயினில், நிறுவனங்களின் நிர்வா கக் குழுவில் 40 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும் என்ற சட் டத்தை அந்நாட்டு அரசு நடைமுறைபடுத்த உள் ளது.

“உலகம் மகளிர் தினம்” இன்று கொண்டாடப் படும் வேளையில், பெண் களுக்கான சலுகைகளை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், அய் ரோப்பிய நாடான ஸ்பெ யின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் வெளியிட்ட அறிக்கை:பாலின இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப் பட்டு விரைவில் நாடாளு மன்றத்தில் தாக்கல் செ ய் யப்பட்டு நிறைவேற்றப் படும்.

அதன்படி, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும், 250க்கும் அதிகமான ஊழியர்களை உடைய நிறுவனங்களின் நிர்வாக குழுவில், 40 சதவீதம் பெண்களை நியமிக்க வேண்டும். மேலும், தேர் தலில் போட்டியிடுவதி லும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க இந்த சட்டம் வழிவகுக் கும்.

சமூகத்தில் பெண்க ளின் பங்களிப்பு சமபங் காக இருக்க வேண்டு மெனில், அரசியல் மற் றும் பொருளாதாரத்தில் அவர்கள் பாதிக்கு பாதி அங்கம் வகிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *