மும்பை, ஆக. 19- காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர தொண்டர்களாக இருந்தனர் என சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் வி.டி. சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சத்யகி சாவர்க்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
17.8.2026 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையின் போது, ராகுல் காந்தியின் வழக்குரைஞர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்யகி, தனது தாத்தாவான கோபால் கோட்சே மற்றும் நாதுராம் கோட்சே ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையில் தீவிர தொண்டர்களாக செயல்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக மகாராட்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில்,
‘‘காந்தியார் படுகொலைக்குப் பிறகு கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. தற்போது சாவர்க்கரின் பேரன் கூறியுள்ள தகவலால், மக்களிடம் ஆர்.எஸ்.எஸ். பொய் கூறியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அந்த அமைப்பு உடனடியாக பதிலளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
