சென்னை, ஆக. 12- கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்விற்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இன்று (12.8.2026) சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், இந்நிகழ்வு தொடர்பாக காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலையில் காவல்துறை முற்றிலும் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் தொடர்பாக புகார் அளித்தவரின் விவரங்களை காவல்துறையினரே சம்பந்தப்பட்டவர்களிடம் கசியவிட்டதே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணம் ஆகும்
நீதி வழங்க கோரிக்கை: படுகொலை செய்யப்பட்ட மாணவர் அமுதனின் குடும்பத்திற்கு உரிய நீதியை அரசு உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான புகார்களில் ரகசியம் காக்கப்படாததும், காவல்துறையின் மெத்தனப்போக்குமே ஒரு இளம் மாணவனின் உயிரைப் பறித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
