டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் நகலுடன் அமைச்சர் வினோத் வழிபாடு. தவெக அரசின் கூட்டணி கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்., சமூக அமைப்புகள் கண்டனம்.
* ஊழல் நிறைந்த கல்வி முறை; மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பப்பு, அயோத்தி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் ஆகியோர் நாடாளுமன்றத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம்சாட்டி துறவிகள் புகார் அளித்துள்ளனர். ஸநாதனம் எதிர்ப்பு என்ற பெயரில் வாரணாசி காவல்துறை ஆணையர் வழக்கு பதிவு.
* காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல்: 2018ஆம் ஆண்டின் தீர்ப்பை அமல்படுத்த கோரிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜார்கண்டில் தேர்வுக் கசிவுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் தீவிரம்: ஜேபிஎஸ்சி (JPSC) தேர்வு முறைகேடுகளை கண்டித்து, ஜூலை 25 முதல் ராஞ்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத் அரசு பள்ளிகளில் முரண்பாடு: மாணவிகள், எஸ்சி, எஸ்டி சேர்க்கை விகிதம் கடும் சரிவு: 3–5ஆம் வகுப்புகளில் மாணவிகள், எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் குறைந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
தி இந்து:
* விளக்கமற்ற கொலீஜியம் பரிந்துரைகள் தவறான நீதிபதி நியமனங்களுக்கு வழிவகுக்கும்: முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சிறுபான்மையினரை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்தை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி புயான், கொலீஜியம் மீண்டும் வெளிப்படைத்தன்மையை இழந்துள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
*ஊழியர் வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கு: அனில் அம்பானி மீது சிபிஅய் வழக்குப்பதிவு: ரிலையன்ஸ் கேபிடல் பத்திரங்களில் நிதி திசை திருப்பப்பட்டதால், EPFO-க்கு ரூ.1,816 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக சிபிஅய் குற்றஞ்சாட்டியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை பறிக்கும் பாஜக சதி என்றும், அதற்கு ஆதரவு அளிப்பவர்கள் ‘21-ஆம் நூற்றாண்டின் எட்டப்பன்’ எனவும் ராகுல் காந்தி பேட்டி.
– குடந்தை கருணா
