தெருமுனைக் கூட்டங்கள் – பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடத்த கோவை வடக்குப் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

அரசியல்

கோவை, மார்ச் 12-  கோவை வடக்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 8.3.2023 அன்று மாலை 7 மணி யளவில்  அஞ்சுகம் நகர் கவி.கிருஷ்ணன்  இல்லத்தில் மாவட்ட  தலைவர் தி.க.செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் க.வீரமணி, மண்டல செயலாளர் ச.சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர செயலாளர் ச.திராவிட மணி, வடக்குப் பகுதி செயலாளர் கவிஞர் கவி.கிருஷ்ணன், தெற்குப் பகுதி செயலாளர் தெ.குமரேசன், பிள்ளையார்புரம் ஆனந்த், அஞ்சுகம் நகர் கோபால், ஜெகநாதன், சவுகத் பாஷா, மோகனசுந்தரம், செயக்கொடி ஆகியோர் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண் டனர்.

தீர்மானம்: 1

கோவை வடக்குப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்: 2

திராவிட மாணவர் கழக 80 ஆம் ஆண்டு மாநில மாநாட்டினை கோவைக்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *