மதுரையில் சாலைகளின் நடுவே அமைந்துள்ள வளைவுகளை அகற்றிய மதுரை மாநகராட்சிக்கும் சாலை பாதுகாப்பை உறுதி செய்த நீதிமன்றத்துக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம். அதே போல மதுரை மாநகரங்களில் சாலையோர (ப்ளாட் பாரம்)நடைபாதை முழுக்க கடைகளாகவும், கடைக்கார்களின் விளம்பரப் பதாகைகளாகவும் , கடைக்குள்ளே வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய பொருட்களையே விளம்பரத்துக்காக நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால்..பொதுமக்கள் நடைபாதையை விட்டு சாலையில் இறங்கி நடக்கக்கூடிய சூழல் உருவாக்கப்படுகிறது. நடைபாதைக் கோயில்களுக்கோ பஞ்சமில்லை. அதனாலும் விபத்துக்குள்ளான நிறைய நிகழ்வுகள் நடந்துள்ளன. எனவே நடைபாதை மக்களுக்கான நடைபாதையை மக்களுக்கான பாதுகாப்பான பயணத்துக்கான பாதையாக மாற்றியமைக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்கிறோம்.
இரா.லீ.சுரேசு, மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்
