நேற்று (14.3.2023) தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து ஆறு மண்டல இணை இயக்குநர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், செய்தி மக்கள் தொடமர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சிவ.சு.சரவணன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பா.அன்புச்சோழன் ஆகியோர் உள்ளனர்.