குமரி மாவட்ட கழக சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம்

குமரி மாவட்ட கழக சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் நாகர்கோயில் மாநகர் முழுவதும் 15.7.2026 அன்று நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் ம. தயாளன் பொதுக்குழு உறுப்பினர் மு. ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ். அலெக்சாண்டர், சி.அய்சக் நியூட்டன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு கழக கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் டாக்டர் பி.கலைச்செல்வன் கோட்டார் பகுதி கழகத் தலைவர் ச.ச.மணிமேகலை திராவிடர் கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னு ராஜன் கன்னியாகுமரி நகரச் செயலாளர் க.யுவான்ஸ், கழக வடசேரி பகுதித் தலைவர் பா.சு.முத்து வைரவன் கழகத் தோழர்கள்
ஞா.பிரான்சிஸ், மு.குமரிசெல்வன், பெனடிக்ட் மற்றும் பலரும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தந்தை பெரியார் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோர் எழுதிய நூல்கள், பகுத்தறிவு துண்டறிக்கைகள் வழங்கினர் பொதுமக்களும் ஆர்வமுடன் கருத்தூன்றிப் படித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *