ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜெயங்கொண்டம், ஜூலை 12- நேற்று (11.7.2026) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா முதல்வர் ஜான் பிரிட்டோவின் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. சிறப்பு விருந் தினராக நாராயணசாமி தலைமை ஆசிரியர் (ஓய்வு) கலந்துகொண்டு விழா வினைச் சிறப்பித்தார்

தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம் மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப் பற்றையும் வளர்ப்பதே ஆகும்

மேலும் இவ்விழா வரவேற்பு நடனத்துடன் இனிதே தொடங்கியது. மாணவர்கள் வேலுநாச் சியார், நேரு,சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி, அவ்வையார், பெரியார் போன்று பல்வேறு வேடங்களில் வருகை புரிந்து அனைவ ரையும் மகிழ்வித்தனர். அதுமட்டுமின்றி தமிழ்மொழியின் சிறப்பு களையும், குறிஞ்சிப் பாட்டில் வரும் 99 வகையான பூக்களின் பெயர்களையும், தமிழ்மொழி பற்றி பாடல் கவிதை மற்றும் திருக்குறள் ஒப்பிவித்தல் ஆகியவற்றை அழகாக அரங்கேற்றினர்.

மேலும், கோலாட்டம், அய்ந்திணை நடனம், மற்றும்பாரம்பரிய நடனம் அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. சிறப்பு விருந்தினர் தன் உரையில் மாணவர்கள் அறிவோடு சிந்தித்து பகுத்தறிவோடு செயல்பட வேண்டும்என்பதை சிறு சிறு கதைகள் மூலம் விளக்கி அழகாக எடுத்துக் கூறினார்

பள்ளியின் முதல்வர் தன்னுடைய சிறப்புரையில் மாணவ மாணவிகள் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தங்களுடைய தனித் திறமைகளை வெளிக்கொணர வேண் டும் என அறிவுறுத்தினார்.

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

விழாவின் நிறைவாக மாணவி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர்கள் கிரிஜா, இளங்கோவன், கவிதா, எஸ்தர், சுந்தரா தேவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *