நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுவது முதன்முறையாகும்: சத்தீஸ்கர் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Viduthalai
2 Min Read

ராய்ப்பூர், மார்ச் 18- அதானி விவகாரத்தில் கேள்விகளை தவிர்த்து, திசை திருப்ப ஆளுங்கட்சியே நாடாளு மன்றத்தில் முதன்முறையாக அம ளியில் ஈடுபடுகிறது என சத்தீஸ்கர் முதல் அமைச்சர் குற்றச் சாட்டு தெரிவித்து உள்ளார்.  

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், கடந்த 5 நாட் களாக இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர் கள் பேசி, முழக்கங்களையும் எழுப் பினர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதேபோன்று, 5-ஆவது நாளான நேற்றும் அவை கூடியதும், இங் கிலாந்து நாட்டில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளுங் கட்சியும், தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியின ரும் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இரு அவைகளிலும் தொடர் அமளியால் அவை நட வடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளு மன்றத்திற்கு வெளியேயும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதி கொள்ளும் வகையில், ஒரு வருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி பேசி கொண்டனர். 

இந்த நிலையில், சத்தீஸ்கர் முதல்- அமைச்சர் பூபேஷ் பாகல் கூறும்போது, அதானியுடன் பிரத மரின் வெளிநாட்டு பயணம், துணை நிறுவனங்கள் மற்றும் எல்.அய்.சி. பணம் இழப்பு ஆகி யவை பற்றி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளு மன்றத்தில் எழுப்பிய கேள்விக ளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை. நாங்கள் அவை யில் எழுப்பிய இந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனம் திசை திரும்ப வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் அவர்களே அமளியில் ஈடுபடுவதும், குழப்பம் ஏற்படுத்தியும் வருகின்றனர் என கூறியுள்ளார். ஆளுங்கட்சி ஒன்று நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் கூச்சல், குழப்பம் ஏற் படுத்தி அவை நடவடிக்கைகள் நடைபெறாமல் அமளியில் ஈடுபடு வது இதுவே முதன்முறையாகும் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *