காரகஸ், ஜூன் 27– வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 920 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் பேருக்கு மேல் காணவில்லை
இடிபாடுகளில் சிக்கியிருந்த 3,360 பேர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வசித்த சுமார் 50,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட் டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதி களில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
