சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிலைக்குக் கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2026) காலை 10.30 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் அவரது சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மலர்மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மயிலை டி.ஆர்.சேதுராமன், அய்ஸ் அவுஸ் அன்பு, சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, த.மரகதமணி, செ.பெ.தொண்டறம், உத்திராமணி, சகானா, மித்திரா, குமாரி, பவித்திரா, சி.காமராஜ், பார்த்திபன், விஜய், மகேஷ், பெரியார் மாணாக்கன், யாழ்திலீபன், பிரசாந்த், இராமநாதன், முரளி, அருண் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலைக்கு தி.மு.க. சார்பில், மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *