சென்னை, ஜூன் 25 இந்தியாவின் மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2026) காலை 10.30 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் அவரது சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மலர்மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மயிலை டி.ஆர்.சேதுராமன், அய்ஸ் அவுஸ் அன்பு, சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, த.மரகதமணி, செ.பெ.தொண்டறம், உத்திராமணி, சகானா, மித்திரா, குமாரி, பவித்திரா, சி.காமராஜ், பார்த்திபன், விஜய், மகேஷ், பெரியார் மாணாக்கன், யாழ்திலீபன், பிரசாந்த், இராமநாதன், முரளி, அருண் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலைக்கு தி.மு.க. சார்பில், மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் மாலை அணிவித்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.
