தமிழ்நாடு முழுவதிலும் டி-சேவா மய்யங்கள் தொடங்குவதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக டி-சேவா மய்யத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்கள், மண்டலங்கள் மற்றும் ஊராட்சிகளில் டி-சேவா இணையம் மற்றும் திறன் மேம்பாட்டு மய்யங்களை தொடங்குவதற்கு தொழில் முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினோரிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய பான் அட்டைகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான பயணச் சீட்டுகள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், ஆதார்ப் பாவனையால் பண பரிமாற்றம், மைக்ரோ ஏடிஎம் சேவைகள், பண வைப்பு, சுகாதாரம், பைக் மற்றும் கார் காப்பீடுகள், நிலுவை கட்டணங்கள், 1000-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பாடநெறிகளில் இணைய தளப் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு, 500-க்கும் மேற்பட்ட திறன்களுக்கு திறன் சான்றிதழ் தேர்வுக்கான பதிவு, 100-க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளுக்கான மதிப்பெண் தேர்வு பதிவு மற்றும் பிற இணைய தள சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கலாம்.
வேறுபட்ட இணையதள சேவைகள் வழங்குவதன் மூலம் விண்ணப்பிப்போர் தன்னித்திறன் பெற்று தொழில் தொடங்கவும் முடியும். டி-சேவா சென்டர் தமிழ்நாட்டில் 5000 தொழில்முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினருக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்கவும் மற்றும் 15 லட்சம் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது.
இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளோர் www.tsevaonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 8179955744 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
