தங்கச்சிமடம், ஜூன் 6-திராவிடர் எழுச்சி நாள் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் – தங்கச்சிமடம் முக்கிய வீதியான தர்கா நிறுத்தம் பகுதியில் 5.6.2026 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர் கே.எம்.சிகாமணி தலைமை வகித்தார்.
மாவட்ட கழக செயலாளர் எம்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பகுத்தறிவுவாளர் கழக தலைவர் எஸ்.பேரின்பம் வரவேற்பு ரையாற்றினார்.
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் சேசு மிக்கேல், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் ராஜ்குமார் சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு இளைஞர் அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சீனி மற்றும் மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் தேவசகாயம், ராமேஸ்வரம் நகர தலைவர் எட்வர்ட், தங்கச்சிமடம் கழக தலைவர் குழந்தை ராயர், மதிமுக ராமேஸ்வரம் பொறுப்பாளர் கெவிக்குமார், கழகத் தோழர்களும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
