ஈரோடு முதல் கடலூர் வரையிலான தொடர் பிரச்சாரப் பயண நிறைவு விழா கடலூரில் பணிகள் தீவிரம் – வேளாண்துறை அமைச்சருடன் சந்திப்பு

1 Min Read

அரசியல்

கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் 31 3 2023 அன்று கழக பரப்புரை பயண நிறைவு விழா நிகழ்ச்சி மாநாடு போல் ஏற்பாடாகி வருகிறது. சுவர் எழுத்து விளம்பரங்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், கழகப் பேச்சாளர் புலவர் ராவணன், காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஆனந்த பாரதி ஆகியோர் 25.3.2023 அன்று காட்டுமன்னார்குடி முட்டத்தில் சந்தித்து நேரில் வழங்கினர். அண்மையில் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை சிறப்பாக தயாரித்து சட்டசபையில் நிறைவேற்றிய அமைச்சரின் சீரிய பணியை கழகத் தோழர்கள் பயனாடை போர்த்தி பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *