மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக அன்னை நாகம்மையார் நினைவேந்தல் நிகழ்ச்சி

மதுரை, மே 14- 11-05-2026 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக அன்னை நாகம்மையார் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம் தலைமையேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் எடிசன் ராஜா மலர் தூவி நினைவேந்தலைத் தொடங்கி வைத்தார்கள். அவரை தொடர்ந்து நிகழ்விலே கலந்து கொண்ட தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் மாவட்ட செயலாளர் இராலீ. சுரேஷ், ,கழக மாவட்ட துணைத் தலைவர் நா.முருகேசன் மாவட்ட மகளிர் அணி தலைவர் நாகராணி இளமதி முருகேசன், சுசிலா பகுத் தறிவாளர்கள் அமைப்பாளர் பா சடகோபன், செல்லத்துரை, ஜெயிலர் கலையரசன், ரமேஷ் ஆட்டோ செல்வம் மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தேவராஜபாண்டியன். போட்டோ ராதா தெய்வசிகாமணி .ஆகியோர் மலர் தூவினர். பகுத்தறிவாளர்களாக மாவட்ட தலைவர் ச.பால்ராஜ் உரை யாற்றினார் . பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம்,

அன்னை நாகம்மையார் உலகின் நாத்திக இதழின் முதல் பெண் ஆசிரியராக இருந்ததையும், வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் கொள்கைக்கு உர மூட்டும் விதமாக வாழ்ந்ததை தமிழர் தலைவர் ஆசிரியர் இன்று தமிழ்நாடெங்கும் அவரது நினைவு நாளைக் கொண்டாடச் செய்து எழுச்சியூட்டுவது சிறப்பு என எடுத்துரைத்தார்.

திராவிட கழக சொற்பொழி வாளர் அ வேங்கை மாறன் அன்னை நாகம்மையாரின் தொண்டறத்தை உழைப்பை போராட்டத்தை தனது நினைவேந்தல் உரையில் எடுத்துரைத்தார்கள்

ப.க அமைப்பாளர்பா.சடகோபன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னையை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *