மேற்குவங்கத் தேர்தல் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விசயத்தில் தலையிடுவது முதிர்ச்சியற்றது டிரம்ப்புக்குச் சிவசேனா எம்.பி. கண்டனம்!

மும்பை, மே 10- மேற்கு வங்கத்தில் பா.ஜ.க (207 இடங்கள்) வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்….

இந்நிலையில், உத்தவ் தாக்கரே கட்சியின் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ராவத், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் இந்தியாவின் உள்நாட்டு விசயம், அதில் டிரம்ப் தலையிடுவது முதிர்ச்சியற்றது மற்றும் தவறானது.

மம்தாவின் ஜனநாயகப் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதிபர் டிரம்ப் உண்மையான நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், வெறும் வெற்றியை மட்டும் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தப்பட வேண்டும். அதிபர் டிரம்பை திருத்துவது எனது கடமை என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *