கே.மேரூர், மே 9- சேலம் மாவட்டம், கே. மோரூரை பிறப்பிட மாகக் கொண்ட தமிழாசிரியர் பெரியார் பெருந்தொண்டர் சூ.மாணிக்கம் (வயது 77) உடல் நலக்குறைவால் 7-5-2026 அன்று மறைவுற்றார். அவரது இல்லத்தில் உடல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட செயலாளர் கு. தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர்கழக துணை செயலாளர், மூ. சிவகுமார், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் பொன்.அய்யனார், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச் சையப்பன், கடத்தூர் நகர தலைவர் நெடுமிடல், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், பகுத் தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் சொ.பாண்டியன் வேப்பிலைப்பட்டி திமுக நிர்வாகிகள் அ.தமிழரசன், மூ.கணேசன், தீ.அமுல்செல்வம் மற்றும் சி.ஆசைதம்பி, க.மணி, கழக இளைஞரணித் தோழர் சிரிகுரு, பார்த்தசாரதி, விடுதலைவாசகர் வட்ட முன்னாள் தலைவர் கோ.தன சேகரன் மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்
தருமபுரி மாவட்டத்தில் வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், சிந்தலப்பாடி, குருபரல்லி ஊர்களில் பணியாற்றிய காலத்தில் (1970-1980) தந்தை பெரியாரின் கொள்கை ஏற்று பள்ளிக்கு கருப்பு சட்டையுடன் வருவதுடன், கையில் விடுதலை, பெரியார் புத்தகங்கள் இல்லாமல் இருக்க மாட்டார். தான் பணியாற்றிய இடங்களில் மாணவர்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை விதைத்ததுடன், மாணவர்களின் கட்டுப்பாடான ஒழுக்க நெறியை வளர்த்தவர். பணியாற்றிய 50 ஆண்டுகள் கடந்தும் அவரை கிராம மக்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளார்கள். என்பதற்கு அவருடைய பகுத்தறிவு பணியே காரணம். அவர் சொந்த ஊரான கே. மோரூரில் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான நூல்களை வழங்கி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
