அதிர்ச்சி தகவல்ஏப்.1ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வாம்

1 Min Read

மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு இப்பொழுது மக்கள் உயிரிலும் விளையாடுகிறதா?

சென்னை, மார்ச் 30- ஏப்ரல் 1ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. வலி ​​நிவாரணி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்து களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. ஆண்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் மாற்றத்திற்கு ஏற்ப மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்தும். மொத்த விற்பனை விலைக் குறியீடு அதிகரித்துள்ளதன் காரணமாக,  அத்தியாவசிய மருந்துகளாக  வகைப்படுத்தப்பட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் அதிகரிக்கும்.

ஏனெனில், அரசாங்கத்தால் அறி விக்கப்பட்ட வருடாந்திர மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் ஆண்டு மாற்றம் 12.12 ஆக அதிகரிக்கும் என்று மருந்து விலைக் கட்டுப்பாட்டாளர் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணை யம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண் டின் அடிப்படையில் சதவிகிதத்தை அதிகரிக்கலாம். மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலையை உயர்த்த வேண் டும் என்று கோரிக்கை விடுத்து வருகின் றன. சுமார் 900 மருந்துகளின் விலை 12 சதவீதத்திற்கு அதிகமாக அதிகரிக்கலாம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலை, அனுமதிக்கப்பட்ட உயர்வை விட அதிகமாக அதிகரித்துள்ளது. பட் டியலில் இல்லாத விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். புதிய விலைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *