விதவைகள் வாழ்வில் மறுமலர்ச்சி மகளிர் நல வாரியம் : தமிழ்நாடு அரசு அமைப்பு

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மார்ச் 30- விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண் களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. சமூக நலன் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கடந்த 1.9.2021 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவி டப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் சமுதாயத்தில் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராகவும், சமூக நல இயக்குநரை உறுப்பினர் செயலாளராகவும் கொண்டு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை உருவாக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த வாரியத்தின் அலுவல்சார் உறுப்பினர்களாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர், தி.மு..க. மாநிலங்க ளவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, சட்டமன்ற உறுப்பினர் வரலட் சுமி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (அல்லது அவரது பிரதிநிதி), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் (சென்னை), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் (சென்னை) ஆகியோர் பணியாற்று வார்கள். 

அலுவல் சாரா உறுப்பி னர்களாக 14 பேர் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டனர். அதன்படி, சக்தி மசாலா நிறுவன இயக்குநர் சாந்தி துரைசாமி, ரேணுகா ஆலிவர், ரேவதி அழகர் சாமி உள்பட 14 பேரை அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்படுகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *